search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவனந்தபுரம்- சென்னை இடையேசேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்
    X

    திருவனந்தபுரம்- சென்னை இடையேசேலம் வழியாக சிறப்பு ரெயில் இயக்கம்

    • ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்ப தற்காக ரெயில்வே நிர்வா கம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னை எழும்பூ ருக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.
    • திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 12,45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    சேலம்:

    மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, விஷு பண்டிகைகள் மற்றும் தமிழ் புத்தாண்டையொட்டி ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரெயில்வே நிர்வாகம் திருவனந்தபுரத்தில் இருந்து கோவை, சேலம் வழியாக சென்னை எழும்பூ ருக்கு சிறப்பு ரெயிலை இயக்குகிறது.

    அதன்படி திருவனந்த புரம்- சென்னை எழும்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06044) நாளை (புதன்கிழமை) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு கொல்லம், செங்கனூர், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், அலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.52 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக மதியம் 12,45 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடையும்.

    இதேபோல் மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (06043) வருகிற 6-ந் தேதி மற்றும் 13-ந் தேதி ஆகிய நாட்களில் சென்னை எழும்பூரில் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இரவு 7.22 மணிக்கு சேலம் வந்தடையும் பின்னர் இங்கிருந்து 7.25 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு திருவ னந்தபுரம் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவ லகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×