search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி அருகே சாலையில் குட்டியுடன் சுற்றிய கரடிகள்
    X

    கோத்தகிரி அருகே சாலையில் குட்டியுடன் சுற்றிய கரடிகள்

    • கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது.
    • வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுவட்டாரப்பகுதி களில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    கோத்தகிரியில் இருந்து பன்னீர் செல்லும் சாலையில் இரவில் குட்டியுடன் கரடி உலா வந்தது. இதனை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனத்தை இயக்கி வருகிறார்கள். எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு சாலைகளில் சுற்றித்திரியும் வனவிலங்குகளை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×