என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் நள்ளிரவில் ஊருக்குள் நுழையும் கரடிகள்
    X

    கோத்தகிரியில் நள்ளிரவில் ஊருக்குள் நுழையும் கரடிகள்

    • இந்த கிராமம், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது.
    • கடந்த மாதம் 2 சிறுத்தைகள், 2 கருஞ்சிறுத்தைகள் மற்றும் 2 கரடிகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே பெரியார் நகர் கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையானது பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கிராமம், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. இதனால் தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அங்குள்ள சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இந்த காட்சிகள் அங்குள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதே பகுதியில் கடந்த மாதம் 2 சிறுத்தைகள், 2 கருஞ்சிறுத்தைகள் மற்றும் 2 கரடிகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சமடைந்துள்ளதோடு சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×