search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணம்  பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனையை தடுக்க வேண்டும்
    X

    காவேரிப்பட்டணம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனையை தடுக்க வேண்டும்

    • மேலும் இவர்களே போலியாக டிக்கெட்டை அச்சடித்து வேறு ஒருவருக்கு பணம் விழுந்து விட்டது. உங்களுக்கு பணம் விழவில்லை.
    • நீங்கள் நாளை டிக்கெட் வாங்கினால் அதில் கட்டாயம் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி எங்களிடம் லாட்டரி டிக்கெட் விற்று விடுகின்றனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து ஏராளமானோர் தங்கள் பிழைப்புக்காக காவேரிப்பட்டினம் வந்து அங்கிருந்து வெளியூருக்கு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் காவேரிப்பட்டணம் வருபவர்கள் ஆங்காங்கே உள்ள டீக்கடைகளில் டீ குடிக்கின்றனர். அப்பொழுது அங்கு வரும் லாட்டரி டிக்கெட் விற்பனையாளர்கள் அதிகாலை இருந்தே தங்கள் லாட்டரி டிக்கெட் விற்பனையை டீக்கடையில் இருந்து தொடங்குகின்றனர்.

    பின்பு அவர்களுக்கு தெரிந்த கடைகளுக்கு சென்று லாட்டரி டிக்கெட் விற்கின்றனர். மேலும் தற்பொழுது தகவல் தொழில்நுட்ப வசதி அதிகம் உள்ளதால் சிலர் லாட்டரி டிக்கெட் விற்பவர்களிடம் போன் மூலமாகவே தகவல் தெரிவித்து அவர்களுக்கு பிடித்த எண்களை குறிப்பிட்டு அந்த எண்களில் உள்ள லாட்டரி டிக்கெட்டை தனியாக எடுத்து வைக்க சொல்கி ன்றனர்.

    அவர்க ளுக்கு கூகுள்- பே , பேடிஎம் மூலமாக லாட்டரி டிக்கெட் விற்பவர்களுக்கு பணத்தை செலுத்தி விடுகின்றனர். இதுகுறித்து லாட்டரி டிக்கெட்டில் பணம் இழந்தவர்கள் கூறும் பொழுது நாங்கள் சும்மா இருந்தாலும் லாட்டரி டிக்கெட் விற்பவர்கள் எங்களை தொடர்பு கொண்டு நச்சரித்து லாட்டரி டிக்கெட் வாங்க வைத்து விடுகின்றனர்.

    நாங்களும் ஏதாவது ஒரு நாள் பரிசு விழும் என்று லாட்டரி டிக்கெட் வாங்குகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பெரிய அளவில் பணம் ஏதும் விழவில்லை.

    மேலும் இவர்களே போலியாக டிக்கெட்டை அச்சடித்து வேறு ஒருவருக்கு பணம் விழுந்து விட்டது. உங்களுக்கு பணம் விழவில்லை.

    நீங்கள் நாளை டிக்கெட் வாங்கினால் அதில் கட்டாயம் பணம் விழும் என்று ஆசை வார்த்தை கூறி எங்களிடம் லாட்டரி டிக்கெட் விற்று விடுகின்றனர். இது குறித்து காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் குறிப்பாக பஸ் நிலையம், கொசமேடு, பாலக்கோடு கூட்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் லாட்டரி டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்வைிடுத்துள்ளனர்.

    Next Story
    ×