search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு
    X

    தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை சாவு

    • சம்பவத்தன்று வீட்டில் திலக் விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
    • கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஓமேத பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 3 வயதில் திலக் என்கிற குழந்தை இருந்தன.

    சம்பவத்தன்று வீட்டில் திலக் விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    உடனே பெற்றோர்கள் குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.

    இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×