என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
    X

    பழனி மலைக்கோவிலில் திரண்ட பக்தர்கள்.

    பழனியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

    • சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தங்கள் புனித யாத்திரையில் பழனி முருகனையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • அடிவாரம் மலைக்கோவில், கிரி வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பழனி:

    தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் தங்கள் புனித யாத்திரையில் பழனி முருகனையும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    இதனால் கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.மேலும் இன்று விடுமுறை என்பதால் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் அடிவாரம் மலைக்கோவில், கிரி வீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகையால் நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனை சீர்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதிக வாகனங்கள் வந்ததால் சமாளிக்க முடியவில்லை. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ரோப்கார், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகியவற்றிலும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் படிப்பாதை மற்றும் யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலை க்கோவிலுக்கு சென்றனர்.

    கூட்டம் அதிகரித்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

    Next Story
    ×