என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுஷ்மான்பவ வாராந்திர சுகாதார முகாம்
    X

    ஆயுஷ்மான்பவ வாராந்திர சுகாதார முகாம்

    • பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆயுஷ்மான்பவ வாராந்திர சுகாதார முகாம் நடைபெற்றது.
    • சிறப்பு மருத்துவ்ர்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மத்திய சுகாதாரத் துறை மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

    அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை மூலம் ஆயுஷ்மான் பவ என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மருத்துவ மனையிலும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடை பெற அறிவுறுத்தப்பட்டது. இதை யொட்டி பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் தலைமை மருத்து வர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. முகாமில் சுகாதார நல பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் மருத்துவர்கள் சசிரேகா, பாலசுதா, தீபிகா உள்ளிட்ட மருத்துவ குழுவி னரால் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், காது, மூக்கு, மற்றும் தொண்டை பரிசோதனை, கண் சிகிச்சை தொடர்பான பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ சேவை உள்ளிட்ட பரிசோ தனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இம்முகாமில் மருந்தா ளுநர்கள் முத்துசாமி, முருகேசன், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×