என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி
- மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- இப்பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா - அகரம் அரசு நடுநிலைப் பள்ளி சார்பில் 2024-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விழிப்புணவு பேரணி நடைபெற்றது.
பேரணியில் அரசு வழங்கும் காலை உணவுத்திட்டம், புதுமைெபண் திட்டம், இட ஒதுக்கீடு, நான் முதல்வன் திட்டம் , உள்ளிட்ட அரசு வழங்கி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து கிராம மக்களுக்கு கூறி தெரிவுபடுத்தினர்.
மேலும் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இப்பேரணிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினகள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
Next Story