search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மாணவர்கள், மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.

    ஓசூர்,

    உலக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு, ஓசூர் எம்.ஜி.ஆர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஓசூர் பஸ் நிலையம், பத்தலப்பள்ளி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, மது மற்றும் போதைக்கு அடிமையாகாமல் இருத்தலும், போதைப் பொருட்களைக் கடத்துவது குற்றம் என்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆர் கல்லூரி வளாகத்தில் உலக போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினக்கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கி பேசுகையில், "மாணவர்கள், மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும் என்றும், போதைப் பொருள் கடத்தலுக்குத் துணைப்போகக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.

    இதில், ஓசூர் அட்கோ போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, இன்றைய சூழலில் எவ்வாறான நிலையில் போதைக்கு மக்கள் அடிமை ஆகின்றனர் என்பதையும், அதனால் ஏற்படும் துன்பங்கள் குறித்தும் விரிவாக பேசினார். இந்தக்கருத்தரங்க நிகழ்வில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, திட்ட அலுவலர் லெனின் செய்திருந்தார்.

    Next Story
    ×