search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்துக்கு விருது
    X

    கோப்பு படம்

    காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் அறிவியல் மையத்துக்கு விருது

    • காந்திகிராம பல்கலை க்கழகத்தின் வேளாண் அறிவியல் மைத்துக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் மண்டல அளவில் 2ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது.
    • விவசாயிகளின் வருானத்தை உயர்த்தவும் செயல்விளக்கம், ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை க்கழகத்தின் வேளாண் அறிவியல் மைத்துக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் மண்டல அளவில் 2ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், புதுச்சேரி, யூனியன் பிரதேசத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையங்களை ஐதராபாத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி பண்பாட்டு நிறுவனம் கண்காணித்து வருகிறது.

    இந்நிறுவனமும் தமிழ்நாடு வேளாண் பல்கலையும் இணைந்து வேளாண் அறிவியல் மைய செயல்பாடு கள் குறித்து ஆய்வு கூட்டத்தை கோவையில் நடத்தின.

    இதில் காந்திகிராம பல்கலையும், வேளாண் அறிவியல் மையத்துக்கு மண்டல அளவில் 2-ம் இடம் கிடைத்துள்ளது. விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருானத்தை உயர்த்தவும் செயல்விளக்கம், ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.

    மையத்தின் செயல்பா டுகள், விவசாயிகளின் வெற்றி கதைகளை ஆவணப்படுத்துதல், சுழல் நிதி உற்பத்தி போன்ற வற்றுக்காக இந்த வருது வழங்கப்பட்டது. வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி இதற்கான விருதினை வழங்கினார்.

    வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வெங்கட சுப்பிரமணியன், வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×