என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில்   மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் 630 பேருக்கு பரிசோதனை
    X

    .

    அவ்வையார் அரசு மகளிர் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் 630 பேருக்கு பரிசோதனை

    • தருமபுரி அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் 630 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகரா ட்சிக்குட்பட்ட அவ்வை யார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறு வதற்காக மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இம்மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்சினி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பார்வையிட்டார்

    இம்முகாமில் மாற்றுத்தி றனாளிகள் தங்களுக்கு தேவையான முடநீக்கு மருத்துவர், காது மூக்கு தொண்டை மருத்துவர், கண்மருத்துவர், மனநல மருத்துவர்கள் ஆகியோரின் ஆலோசனைகள் பெறுவும் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    மேலும், மாற்றுத்திற னாளி களுக்கான அடை யாள அட்டை பதிவு மற்றும் நலவாரிய பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பராமரிப்பு உதவித்தொகை, வங்கி கடன் மானியம், உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்கான முகவர்கள் நியமனம் போன்ற பல்வேறு திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்கு விண்ணப்பங்கள், கோரிக்கை மனுக்கள் பெறும் பொருட்டு, பல்வேறு துறைகளுடன் இணைந்து ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

    தருமபுரி நகராட்சி மற்றும் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தருமபுரி நகராட்சிக்குட்ப்பட்ட அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாமில் 630-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.

    இம்முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, தருமபுரி வருவாய் வட்டாட்சியர் இராஜராஜன், அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தெரசாள் உட்பட தொடர்பு டைய அலுவலர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×