என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரி அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் கொள்ளை
    X

    பொன்னேரி அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் கொள்ளை

    • ஆட்டோ டிரைவர் சரவணன் மனைவி கோமளா வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்று இருந்தார்.
    • பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த பொன்னியம்மன் நகரில் வசித்து வருபவர் சரவணன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கோமளா வீட்டை பூட்டிவிட்டு தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×