search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காகாபாளையம் பகுதியில் ஒரே நாளில் 5 கடைகளில் கொள்ளை முயற்சி
    X

    கொள்ளை முயற்சி நடந்த கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு ஷட்டர் திறந்து கிடக்கும் காட்சி.

    காகாபாளையம் பகுதியில் ஒரே நாளில் 5 கடைகளில் கொள்ளை முயற்சி

    • ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன.
    • கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.

    காகாபாளையம்:

    சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையான காக்காபாளையம் பகுதியில் மளிகை கடை, பேன்சி ஸ்டோர், டீக்கடை மற்றும் ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் துணிக்கடை, மளிகை கடை உள்ளிட்டவை உள்ளன. இந்த கடைகளில் நேற்று நள்ளிரவில் 5 இடங்களில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்துள்ளனர்.

    இது மட்டும் அல்லாமல் இப்பகுதியில் தொடர் திருட்டு மர்மமாகவே நடைபெற்று வருகிறது .இதனால் போலீசார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் இரண்டு முறை திருட முயற்சி நடந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடு, கடைகளில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். அதுவும் போலீஸ் நிலையம் மிக அருகாமையில் இருந்தும் திருடர்களின் துணிச்சலால் பொதுமக்கள் பயந்து போய் உள்ளனர். இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்து திருட்டு மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×