ஏ.டி.எம்-ல் பணம் திருட முயற்சி

சேலம் அருகே ஏ.டி.எம்-ல் பணம் திருட முயன்றனர்.
ஏ.டி.எம்-ல் பணம் திருட முயற்சி
Published on

சேலம்:

சேலம் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் பொதுத்துறை வங்கிக்கு சொந்தமான இடம் உள்ளது.

இங்குள்ள ஏ.டி.எம்.-ல் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கேமராவை சேதப்படுத்தினர். பின்னர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணத்தை திருட முயன்றனர்.

ஆனால் பணத்தை திருட முடியாததால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனை அறிந்த வங்கி அதிகாரிகள் அன்னதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com