என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொன்னேரியில் பெண் மீது தாக்குதல்: வாலிபர் கொலை- தி.மு.க. கவுன்சிலர் தலைமறைவு
    X

    பொன்னேரியில் பெண் மீது தாக்குதல்: வாலிபர் கொலை- தி.மு.க. கவுன்சிலர் தலைமறைவு

    • இரு தரப்பினரும் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.
    • போலீசார் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆலாடு பகுதியை சேர்ந்தவர் மோகன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் மோகனின் தங்கை நந்தினி என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் அதேப் பகுதியில் புதிய வீடு கட்டி அங்கு குடியேறினார். இதையடுத்து அவர் தான் ஏற்கனவே வசித்த வீட்டின் சாவியை மோகனின் தம்பியான பொன்னேரி நகராட்சி 17-வது வார்டு கவுன்சிலர் இளங்கோவிடம் கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மோகனின் மகள் காயத்திரி. இளங்கோவிடம் இதுபற்றி கேட்டார்.இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காயத்திரிக்கு ஆதரவாக வந்த அதேபகுதியை பாலமுருகன் (48) என்பவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக இரு தரப்பினரும் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். இதுபற்றி போலீசார் 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கவுன்சிலர் இளங்கோ, உறவுக்கார பெண்ணை தாக்கும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவியது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தேடுவதை அறிந்ததும் கவுன்சிலர் இளங்கோ தலைமறைவாகி விட்டார். இளங்கோ மற்றும் அவரது உறவினர்கள் 5 பேரை பொன்னேரி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    Next Story
    ×