என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே 2 பெண்கள் மீது தாக்குதல்
- விவசாய நிலத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் இருப்ப தாககூறப்படுகிறது.
- காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(வயது 38) . இவர் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது விவசாய நிலத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் இருப்பதாககூறப்படுகிறது. இந்த நிலையில் அதனை சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகன் குடும்பத்தினர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் சம்பவத்தன்று வீட்டில் தனியே இருந்த மோகன் மனைவி பானுப்பிரியா, அவரது உறவினர் கலாமணி, ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கைகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த 2 பெண்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்