search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே 2 பெண்கள் மீது தாக்குதல்
    X

    பல்லடம் அருகே 2 பெண்கள் மீது தாக்குதல்

    • விவசாய நிலத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் இருப்ப தாககூறப்படுகிறது.
    • காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(வயது 38) . இவர் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது விவசாய நிலத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான நிலம் இருப்பதாககூறப்படுகிறது. இந்த நிலையில் அதனை சிலர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகன் குடும்பத்தினர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் சம்பவத்தன்று வீட்டில் தனியே இருந்த மோகன் மனைவி பானுப்பிரியா, அவரது உறவினர் கலாமணி, ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியும், கைகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த 2 பெண்களும் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×