என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமை, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கிவைத்தார்.
ஓசூர் உழவர் சந்தையில் இலவச மருத்துவ முகாம் -மேயர் சத்யா தொடங்கிவைத்தார்
- இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
- தரம், விலை குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில்,தாலூக்கா அலுவலக சாலையில் உள்ள உழவர் சந்தையில், விவசாயிகள் வியாபாரிகள் பயனடையும் வகையில்
இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதனை, மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா தொடங்கிவைத்தார். இதில் சுமார் 600 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். பின்னர், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் உழவர் சந்தையில் காய்கறிகளின் தரம், விலை குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும் இதில், மாமன்ற உறுப்பினர் மோசின் தாஜ் நிசார், பகுதி செயலாளர் ராமு, மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார்,மற்றும் பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர்.
Next Story






