search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் ரெயில் நிலையத்தில்  பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
    X

    கைது செய்யப்பட்ட வாலிபர் கார்த்திக்.

    சேலம் ரெயில் நிலையத்தில் பயணியிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

    • ஆப்பிள் ெசல்போனை சார்ஜ் போட்டுவிட்டு சேலம் ரெயில் நிலையம் வந்ததும் தண்ணீர் வாங்குவதற்காக கீழே இறங்கினார்.
    • பின்னர் உள்ளே சென்று பார்த்த போது போனை காணவில்லை.

    சேலம்:

    சென்னை விரும்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 48). இவர் பெங்களூ ரில் இருந்து விருதுநகர் செல்வதற்காக நகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எஸ்.5 கோச்சில் 19 நம்பர் சீட்டில் நேற்று முன்தினம் பயணம் செய்தார்.

    அப்போது ரூ. 90 ஆயிரம் மதிப்புள்ள ஆப்பிள் ெசல்போனை சார்ஜ் போட்டுவிட்டு சேலம் ரெயில் நிலையம் வந்ததும் தண்ணீர் வாங்குவதற்காக கீழே இறங்கினார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது போனை காணவில்லை. இது குறித்து அவர் ெரயில்வே போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நேற்று காலை காவல் உதவி ஆய்வாளர் தங்க ராசு பிளாட்பாரம் - 1-ல் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒரு வாலிபர் சந்தே கத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரணை நடத்தி யதில் அவர் செல்போன் திருடியது தெரியவந்தது அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்ததில் சேலம் பழைய சூரமங்கலம் பாண்டியன் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மகன் கார்த்திக் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜார்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×