search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக குழு கூட்டம் புறக்கணிப்பு
    X

    பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிர்வாக குழு கூட்டம் புறக்கணிப்பு

    • கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் மேலாண்மை இயக்குநர் சக்திவேல் தலைமையில் நடைப்பெற்றது.
    • தலைவர் மற்றும் இயக்குநர்கள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து நெடுஞ்சாலையோரம் அமர்ந்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பல்வேறு தீர்மானங்கள் குறித்து சிறப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் மேலாண்மை இயக்குநர் சக்திவேல் தலைமையில் நடைப்பெற்றது.

    இக் கூட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலை பின்புறம் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்வது, ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நீரேற்றும் அறை உள்ளிட்டவைகளுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யாததை கண்டித்தும், நிர்வாக சீர்கேடு மற்றும் நிர்வாக குளறுபடிகளை கண்டித்து தலைவர் மற்றும் இயக்குநர்கள் கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்து நெடுஞ்சாலையோரம் அமர்ந்தனர்.

    இதை சற்றும் எதிர்பாராத அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இவர்களது கோரிக்கை களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து சமரசம் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×