search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெவ்வேறு இடங்களில்   2 கல்லூரி மாணவிகள் மாயம்
    X

    வெவ்வேறு இடங்களில் 2 கல்லூரி மாணவிகள் மாயம்

    • கடந்த 12-ம் தேதி தீர்த்தமலையில் உள்ள கோவில் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
    • ஊத்தங்கரை போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கரகப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி.இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியா நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் படித்து வருகிறார்.

    இந்நிலையில் தருமபுரி மாவட்டம் பன்னிக்குளம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்று ஐயப்பன் (வயது19) என்பவர் திருமணம் செய்ய கடத்தி சென்றது விசாரணையில் தெரியவந்தது .

    இதையடுத்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மூங்கிலேறி பகுதியைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி.

    இவர் ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12-ம் தேதி தீர்த்தமலையில் உள்ள கோவில் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. அக்கம் பக்கம் விசாரித்ததில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மருதுப்பட்டி மோட்டூர் பகுதிய சேர்ந்த பிரவீன்குமார் (வயது 23) என்பவர் கடத்திச் சென்றதாக தெரிய வந்தது.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசில் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×