என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு சிறப்பு கூட்டம்
- கூட்டம் ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் நடைபெற்றது.
- கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி பிரச்சனைகள் பற்றி உறுப்பினர்கள் பேசினர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகேஷ், ரத்னம்மா, யசோதா, லஷ்மம்மா, காஞ்சனா, பாக்கியவதி, புஷ்பா, தமிழ்செல்வி, மஞ்சுளா, சங்கீதா, லதா, வனீதா, முனிரத்தனா, ஹரிஷ், முனிராஜ், வரதன் சேட்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி பிரச்சனைகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்னண், சிவகுமார் மற்றும் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் பேசினார்கள்.
Next Story






