search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு
    X

    அரூர் காவல் நிலையத்தில் போலீஸ் சூப்பிரண்டு திடீர் ஆய்வு

    • காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் திடீரென்று நேற்றிரவு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
    • கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூர் உட்கோட்டத்தில் அரூர் கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்மைநல்லூர், பள்ளிப்பட்டி, கோபி நாதம்பட்டி, பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரூர் காவல் நிலையத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் திடீரென்று நேற்றிரவு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

    காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகளில் தன்மை குறித்தும், அரூர் காவல் ஆய்வாளர் பாஸ்கர பாபுவிடம் கேட்டறிந்தார்.

    அதன்பிறகு அரூர் கோட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை கட்டுக்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    அரூர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் வாதி, பிரதிவாதிகளிடம் புகா ர்களை பெற்றுக்கொண்டு சரியான முறையில் அவர்க ளுக்கு உரிய மரியாதைகள் கொடுத்து முறையாக விசா ரணை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    ஆய்வின்போது தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் முருகன் உடன் இருந்தார்.

    Next Story
    ×