என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே அரசு பள்ளியில் எலுமிச்சை சாதம் சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஆனதால் பெற்றோர்கள் அதிர்ச்சி
- குட்டூர் துவக்கப்பள்ளியில் சமையல் செய்துவிட்டு தினமும் காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறி வருகிறார்.
- சாதம் சரியாக வேகாமலும், புளிப்பு தன்மை அதிகமாக இருந்ததாலும் இதுபோன்று நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், குட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மத்தூர் அருகே உள்ள காரிமங்கலத்தானூரில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் 19 குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் சத்துணவு பணியிடம் காலியாக உள்ளதால் குட்டூர் துவக்கப்பள்ளியில் வேலை செய்யும் சத்துணவு பணியாளர் விஜயா என்பவர் இப்பள்ளிக்கும் சத்துணவு பணியாளராக செயல்பட்டு வருகிறார். குட்டூர் துவக்கப்பள்ளியில் சமையல் செய்துவிட்டு தினமும் காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறி வருகிறார்.
இந்நிலையில் நேற்று எலுமிச்சை சாதம் செய்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரிமங்கலத்தானூர் பள்ளிக்கு எடுத்துச் சென்று குழந்தைகளுக்கு பரிமாறியுள்ளார்.
இதை சாப்பிட்ட குழந்தைகள் சபிதாஸ்ரீ, வர்ணாஸ்ரீ, ரோகித், தினேஷ் உள்பட 7 மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஆனதால் சிரமத்திற்கு ஆளாகினர். பயந்து போன பெற்றோர்கள் அருகே இருந்த மருத்துவமனையை நாடினர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சாதம் சரியாக வேகாமலும், புளிப்பு தன்மை அதிகமாக இருந்ததாலும் இதுபோன்று நடந்திருக்கலாம் என தெரிவித்தனர்.
இதுகுறித்து பர்கூர் பி.டி.ஓ., சுப்பிரமணியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து கேட்டபோது ஒரு குழந்தைக்கு மட்டும் பேதி ஆனதாகவும் மற்றவர்கள் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அங்கு சத்துணவு பணியாளர் இல்லாததால் மாற்று இடத்திலிருந்து எடுத்து வந்து உணவு பரிமாறியதாகவும், இன்று முதல் காரிமங்கலத்தானூரில் உள்ள பள்ளியில் சமையல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்