என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிடரால் பரபரப்பு
- தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஜோதிடரால் பரபரப்பு ஏற்பட்டது.
- அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி சமத்து வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (62). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் இருவரும் ராமகிருஷ்ணனை பிரிந்து பெங்க ளூரில் உள்ளனர். இந்த நிலையில் ராம கிருஷ்ணன் சமத்துவபுரத்தில் ஜோதிடம் பார்த்து வருகிறார்.
ராமகிருஷ்ணனுக்கு காரிமங்கலம் அருகே உள்ள குட்டூரில் சொந்தமாக இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 10 கோடி என்று சொல்லப்படுகிறது.
சில தினங்களுக்கு முனபு இந்த நிலத்தை அபகரிக்க சிலர் முயற்சி செய்து வருகின்றனர். நிலத்தை கொடுக்க மறுத்ததால் என்னை தாக்கினர் என்று காரிமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் காரிமங்கலம் போரீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் கூறப்ப டுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை நிலத்தை அபகரிக்க முயற்சி செய்யும் கும்பல் ராமகிருஷ்ணனை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.
இந்த நிலையில் மனவேதனையில் இருந்த ராமகிருஷ்ணன் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த தகவலை அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அவரை சிகிச்சை எடுத்து கொள்ள அறிவுறுத்தினர். இதனை யடுத்து அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.






