என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலக்கோட்டையில் பஸ்கள் இல்லாததால் ஆட்டோக்களில் அலைமோதும் பள்ளி மாணவர்கள்
    X

    பஸ் இல்லாததால் ஆட்டோக்களில் பயணிக்கும் மாணவர்கள்.

    நிலக்கோட்டையில் பஸ்கள் இல்லாததால் ஆட்டோக்களில் அலைமோதும் பள்ளி மாணவர்கள்

    • அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்காக காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்வது வழக்கம்.
    • இன்று காலை 8 மணியிலி ருந்து 9 மணி வரை அரசு பஸ்கள் வராததால் பஸ்சு க்காக காத்திருந்த மாண வர்கள் வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து வேக வேகமாக பள்ளியை நோக்கி சென்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் இருந்து தினந்தோறும் வத்தலகுண்டு அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பாலிடெக்னிக், பட்டிவீரன்பட்டி, அரசு மகளிர் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு செல்வதற்காக காலை 7 மணியிலிருந்து 9 மணி வரை அரசு மற்றும் தனியார் பஸ்களில் செல்வது வழக்கம்.

    ஆனால் கடந்த சில நாட்க ளாகவே போதிய நேரத்தில் பஸ்கள் வராததால் மாண வர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலை 8 மணியிலி ருந்து 9 மணி வரை அரசு பஸ்கள் வராததால் பஸ்சு க்காக காத்திருந்த மாண வர்கள் வேறு வழியின்றி ஆட்டோ பிடித்து வேக வேகமாக பள்ளியை நோக்கி சென்றனர். இதில் சில மாணவர்கள் ஆட்டோ விற்கு காசு இல்லாமல் சக மாணவர்களிடம் கடன் கேட்டு வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

    நிலக்கோட்டையில் சமீப காலமாகவே இது போன்ற அவலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோ ர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தொடர்ந்து ஆட்டோக்க ளில் பயணிக்கும் நிலை தொடர்ந்தால் கிராமப்புற ங்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படு வார்கள். நிலக்கோட்டை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து ஊழியர் பற்றாக்குறையால் இது போன்ற நிலை தொடர்வ தாக பொதுமக்கள் தெரி விக்கின்றனர். எனவே போக்குவரத்து கழக அதிகாரி கள் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×