என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் அருவங்காடு-ஜெகதளா சாலை
    X

    குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் அருவங்காடு-ஜெகதளா சாலை

    • மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டில் உள்ள குழிகளில் சிக்கி கீழே விழும் அபாயமும் உள்ளது.
    • சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே அருவங்காடு -ஜெகதளா போக்குவரத்து சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் பாலாஜிநகர், காந்திநகர், ஒசட்டி, ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்வதை பார்க்க முடிகிறது.

    மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் ரோட்டில் உள்ள குழிகளில் சிக்கி கீழே விழும் அபாயமும் உள்ளது. அதுவும்தவிர ரோட்டில் ஆங்காங்கே தோண்டப்பட்ட குழிகளும் சரிவர மூடப்படவில்லை.

    அருவங்காடு - ஜெகதளா இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.20 கோடி செலவில் ரோடு போடப்பட்டது.

    அதன்பிறகு அங்கு பராமரிப்பு பணிகள் நடக்கவில்லை. இதனால் அது தற்போது சிதலம் அடைந்து அனைவரையும் பயமுறுத்தும் சாலையாக மாறி உள்ளது.

    எனவே ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில்உடனடியாக தலையிட்டு அந்த ரோட்டை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து பேருராட்சி அதிகாரிகள் கூறுகையில், அருவங்காடு-ஜெகதளா சாலை பணிக்காக டெண்டர் விடப்பட்டு உள்ளது. நிதி பற்றாக்கு றையால் பணிகள் துவங்காமல் உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×