என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் அரசுப் பள்ளி ஆசிரியை பணிநீக்கம்
- சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
- 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி செம்பூவராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் காரல்மார்க்ஸ் (வயது37). இவரது மனைவி கே.தேவி (38). இவர், கீரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்த தம்பதி 2011-ல் கலப்பு திருமணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், கணவன், மனைவி இடையே வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தொடர்பாக அண்மையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆசிரியை தேவி உள்ளிட்ட 4 பேர் கணவர் கார்ல் மார்க்ஸ் மீது தாக்குதல் நடத்தி கொலை முயற்சியும், சாதி பெயரைச் சொல்லி தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கார்ல் மார்க்ஸ் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆசிரியை கே.தேவி, அரூர் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த ஸ்டாலின், அவரது மனைவி கலையரசி, தாஜ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியை கே.தேவியை தற்காலிக பணிநீக்கம் செய்து தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.குணசேகரன் உத்தரவிட்டுள்ளார்.






