என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள்.
திண்டுக்கல்லில் கலை இலக்கிய போட்டிகள்
- 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
- திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு கவிதை, ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சரவணன், மைய ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






