search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை தாக்கி கைதான சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்டு
    X

    பெண்ணை தாக்கி கைதான சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்டு

    • செல்லம் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவருக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது.
    • இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அடுத்த முருங்கப்பட்டி பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி செல்லம் (வயது 55). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த எழிலரசி என்பவருக்கும் வழித்தட பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதனிடையே கடந்த வாரம் மீண்டும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.

    இதில் எழிலரசியின் உறவினரான பெத்தாம்பட்டி அரசுப்பள்ளியில் அப்போது சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் சந்திரன் (57) என்பவர் செல்லத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த செல்லம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார். பின்னர் இரு தரப்பினரும் இரும்பாலை போலீசில் புகார் அளித்தனர்.

    இதில் எழிலரசி அளித்த புகாரின்பேரில் செல்லத்தின் மகன் தாமோதரனும், செல்லம் அளித்த புகாரின்பேரில் சந்திரனும் கைது செய்யப்பட்டனர்.

    இதனிடையே இந்த விவகாரம் குறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேச்சல் கலைச்செல்வி துறை ரீதியான விசாரணை நடத்தி, சத்துணவு அமைப்பாளர் சந்திரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×