என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூர் வெலிங்டன் மையத்தில் ராணுவ ஓய்வூதியர்கள் கூட்டம்
- கூட்டத்தில் 583 ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.
- ஆதாா் அட்டை புதுப்பித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஊட்டி,
குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டா் தலைமையகத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை, சிவிலியன் ஓய்வூதியதாரருக்கான குறைகளை நிவா்த்தி செய்யும் 2 நாள் கூட்டம் தொடங்கியது.
இதில் ராணுவ மேஜர் ஜெனரல் ராஜேந்திர ராய் பேசும்போது, ஒரு பதவி ஒரே ஓய்வூதியம் நிலுவைத் தொகையை வழங்குவதில் பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள நடவடிக்கைகள், ஓய்வூதியத்தை அனுமதிப்பது முதல் வழங்குவது வரை ஸ்பாா்ஷின் பங்கு ஆகியவை குறித்து விளக்கி கூறினாா்.
இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமாா் 583 ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா். அப்போது அவர்களுக்கு டிஜிட்டல் லைப் சான்றிதழ், இசிஎச்எஸ் சரிபாா்ப்பு, ஆதாா் அட்டை புதுப்பித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story






