என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அம்மன் கோவிலில் அர்ச்சுணன் தபசு நாடக நிகழ்ச்சி
- தபசு மரத்தின் கீழ், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைப்பதோடு, நல்ல மழை பெய்து விவசாயமும் செழிக்கும் என்கிற நம்பிக்கையும் கிராம மக்களிடையே உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் பழையபேட்டை தர்மராஜா கோயில் தெருவில், 7 கிராமங்களுக்கு சொந்தமான ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் அக்னி வசந்த மகோற்சவ விழா நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் திரவுபதி அம்மன் கோவில் அக்னி வசந்த மகோற்சவ திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மகாபாரத தெருக்கூத்து நாடகங்களும் நடைபெற்று வருகிறது.
இதில் தினமும் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கிருஷ்ணன் பிறப்பு, பாண்டவர் பிறப்பு, அரக்கு மாளிகை, சுபத்திரா திருமணம் உள்ளிட்ட பல்வேறு இதிjjjjjjjjjjjjjjjjjfffffffffffffffffffff காச மகாபாரத தெருக்கூத்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த மகாபாரத தெருக்கூத்தில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அர்சுணன் தபசு நாடகம் நடைபெற்றது. இதில் கவுரவர்களை கூண்டோடு அழிக்க சிவபெருமானிடம் பாசுபதம் என்ற ஆயுதம் பெற வேண்டி அர்சுணன் தபசு மரத்தின் கீழ், சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைப்பதோடு, நல்ல மழை பெய்து விவசாயமும் செழிக்கும் என்கிற நம்பிக்கையும் கிராம மக்களிடையே உள்ளது. இதனால் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான கிராம மக்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டதுடன், தபசு மரத்தைச் சுற்றிலும் குப்புற படுத்துக் கொண்டனர். அர்ச்சுணன் வேடம் அணிந்தவர் அவர்களுக்கிடையில் நடந்து சென்று ஆசி வழங்கினார்.
பின்னர் அர்ச்சுணன் ஒவ்வொரு படிக்கும் பாடல் பாடி தபசு மரம் ஏறினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






