என் மலர்tooltip icon

    அரியலூர்

    மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜதுரை(21). கார் ஓட்டுநரான இவருக்கு, அதே பகுதியில் பாட்டி வீட்டில் தங்கி, 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், கடந்த 9.3.21 அன்று ராஜதுரை, மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    இது குறித்து அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அரியலூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து,

    ராஜதுரையை கைது செய்து றையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறுதி விசாரணை முடிந்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. 

    வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன்,  மாணவியை கடத்திச் சென்றதற்காக குற்றவாளி ராஜதுரைக்கு 10 ஆண்டுகளும், அவரை பாலியல் பலாதகாரம் செய்தமைக்காக 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் ரூ.10 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து ராஜதுரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    படைக்கலனை தணிக்கை செய்து கொள்ள கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    அரியலூர்:


     அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் காலங்களில் 

    சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும், தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நல்லமுறையில் நடத்திட மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கலன் (ஆயுதங்கள்) உரிமம் பெற்ற உரிமைதாரர்கள் அனைவரும் தங்களது படைக்கலனை ஆட்சியர், 

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இயங்கும் படைக்கலன் தணிக்கை குழுவின் முன்பாக ஆஜர்படுத்தி தணிக்கை செய்திட வேண்டும்.


    இவ்வாறு தணிக்கை குழு முன்பு ஆஜர்படுத்தாமல் வைத்திருக்கும் படைக்கலன்களை உரிமைதாரர்கள், உடனடியாக தணிக்கை குழுவின் முன்பு ஆஜர்படுத்த வேண்டும். அவ்வாறு ஆஜர்படுத்தாதவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிராம மக்களுக்கு இடையூறாக லாரிகளை இயக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் கருப்பூர் சேனாபதி கிராமத்தில் உள்ள தனியார் சிமென்ட் ஆலை சுண்ணாம்புக் கல் சுரங்க விரிவாக்கம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் கீழப்பழுவூரில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் பொறிாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் சமூகஆர்வலர்கள் தமிழ்களம் இளவரசன, சங்கர், கார்த்திக்குமார், மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்குமுத்து, பொதுமக்கள் சின்னதுரை, ராமச்சந்திரன், முடிமன்னன், பாலசுப்பிரமணியன், இளங்கோவன், ரமேஷ் ரவி சங்கர் உட்பட பலர் தங்களது கருத்துகளை பதிவு  செய்தனர்.

    அப்போது விரிவாக்கம் செய்யப்படும் சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல்லை ஏற்றி ஆலைக்கு செல்லும் லாரிகள் கிராமங்களுக்குள் பொதுமக்களுக்கு இடையூறாக செல்லக்கூடாது. மக்கள் நடமாட்டம் இல்லாத சாலையை பயன்படுத்த வேண்டும். 

    சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைந்துள்ள பகுதியின் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.

    இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் சுண்ணாம்புக்கல்லை தோண்டி எடுக்க வேண்டும். முடிவடைந்த சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை மூட வேண்டும். விபத்துகள் ஏற்படாத வண்ணம் லாரிகளை இயக்க வேண்டும் .

    இதுபோன்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மாவட்ட காவல் துறையினர், போக்குவரத்து துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை உயர அலுவலர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றனர்.

    ×