search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏரி வடிகாலில் மூழ்கி வாலிபர் சாவு
    X

    ஏரி வடிகாலில் மூழ்கி வாலிபர் சாவு

    • ஏரி வடிகாலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்
    • தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார்

    அரியலூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி (வயது 36), கொத்தனார். இவருக்கு சிறுவயதிலிருந்து வலிப்பு நோய் உள்ளது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சின்னமணி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மொட்டையடித்து விட்டு நண்பர் தங்கராஜ் வீட்டில் தங்கி உள்ளார். நேற்று காலை உடையான் ஏரி வடிகாலுக்கு சென்ற சின்னமணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு ஒரு அடி ஆழமே உள்ள தண்ணீரில் குப்புற விழுந்தார். இதில், தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×