என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம்
- உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் நடைபெற்றது.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பரப்ரம்மம் பவுண்டேஷன் சார்பில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம் மற்றும் கட்டுரை ஓவியப் போட்டி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பரப்ரம்மம் பவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் பரப்ரம்மம் த.முத்துக்குமரன் தலைமை தாங்கினார்.ஜெயங்கொண்டம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜ்குமார், மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை குடும்ப நல இயக்க உறுதிமொழி வாசித்து கருத்தரங்கில் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
நமது தாய் நாட்டிற்கும் மொத்த மேம்பாட்டிற்கும் தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் முதன்மை யானதும், முக்கியமானதும் ஆகும். ஆணும், பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக்கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், சிக்கனத்தை கடைப்பிடித்தல், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுத்தல், குடும்பக் கட்டுப்பாடு முறைகளை ஏற்போம் நம் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் படைப்போம் போன்ற தலைப்பில் விவரித்து பேசினார்.
மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் விமல் ராஜ், விக்ரமன், பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.நிகழ்ச்சி முடிவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்பட்டது. முன்னதாக பள்ளி முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். இறுதியில் நர்சிங் கல்லூரி முதல்வர்சுருதி நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்