என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகளிர் தின விழா
- ஜெயங்எகொண்டாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், எம்.எல்.ஏ. கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது
- பெண்கள் அனைவரும் கேக் வெட்டி மகிழ்ந்தனர்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்சர்வதேச மகளிர் தின விழா எம்எல்ஏ கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்களுடன் இணைந்து எம்எல்ஏ கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்தளித்தார். ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குனர் விஜயசங்கர், மண்டல அலுவலர் தமிழ்மணி, ஊரக வளர்ச்சி உதவி செயற்ப்பொறியாளர் வஹிதாபானு, ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் பஞ்சாபிகேசன், ஒன்றியக்குழு தலைவர் ரவிசங்கர், துணைத்தலைவர் லதா கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம் (வட்டார ஊராட்சி), முருகன் (கிராம ஊராட்சி) மற்றும் அனைத்து ஒன்றிய அரசு அலுவலர்கள் இந்த பெண்கள் தின விழாவில் கலந்து கொண்டனர்.
Next Story






