என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெல்டிங் உரிமையாளர் சங்க முப்பெரும் விழா
- தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா நடைபெற்றது
- க்கும் மேற்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு வெல்டிங் உரிமையாளர் முன்னேற்ற சங்கத்தின் முப்பெரும் விழா ஜெயங்கொண்டம் தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் அடையாள அட்டை வழங்குதல் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் மற்றும் இறுதியில் செயற்குழு கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட கௌரவத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலை வகித்து பேசினார். முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் கொலஞ்சியப்பா வரவேற்று பேசினார்.கூட்டத்தில் மாநிலத் தலைவர் வெங்கடேசன் சங்க செயல்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், உடையார்பாளையம், தா.பழூர், மீன்சுருட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். இதில் மாநிலச் செயலாளர் பாலாஜி, மாநில பொருளாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு சங்க அடையாள அட்டையை வழங்கினர். கூட்டத்தில் மின் கட்டணம் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், இரும்பு விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஜெயங்கொண்டம் தா.பழூர், ஆண்டிமடம், உடையார்பாளையம், மீன்சுருட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வெல்டிங் பட்டறை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.






