என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லாரி மோதி பட்டு நூல் வியாபாரி பலி
    X

    லாரி மோதி பட்டு நூல் வியாபாரி பலி

    • லாரி மோதி பட்டு நூல் வியாபாரி பலியானார்
    • இருசக்கர வாகனத்தில் சென்ற போது சம்பவம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் விளந்தை கிராமம் தியாகராஜ நகரை சேர்ந்த பக்தவச்சலம் (வயது 68). பட்டு நூல் வியாபாரியான இவர், கல்லாத்தூர் மெயின் ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் பட்டு நூல் கொடுத்தவர்களிடம் பணம் வசூல் செய்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வந்து ெகாண்டிருந்தார்.

    ஜெயங் கொண்டத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி வந்த லாரி இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பக்தவசலம் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் பக்தவச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில லாரி டிரைவர் மதுபோதையில் வாகனம் ஓட்டி வந்தது தெரிய வந்தது.இதை அடுத்து லாரியை பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×