search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் மது விற்ற பெண் கைது
    X

    அரியலூரில் மது விற்ற பெண் கைது

    • விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ஈஸ்வரி வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மது விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி ஸ்ரீபுரந்தான் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரி(வயது 45) என்பவரது வீட்டில் சோதனை செய்தனர்.

    இதில் அவரது வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×