search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய 292-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய 292-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • ஏலாக்குறிச்சியில் புனித அடைக்கல அன்னை ஆலய 292-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது
    • இன்று (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மன்னார்குடி பங்குதந்தை மரிய வியான்னி தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது.

    திருமானூர்:

    அரியலூர்மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உடபட்ட சுற்றுலா தலங்களிலில் ஒன்றான 1716-ம் ஆண்டு வீரமாமுனிவரால் கட்டப்பட்ட புனித அடைக்கல அன்னை ஆலயம் அமைந்துள்ளது. பழமைவாய்ந்த 53 அடி உயரமுள்ள மாதா பித்தளை சொரூபம் அமையபெற்றுள்ள திருக்கருக்காவூர் எனும் ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயத்தின் 292-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.நிகழ்ச்சியில் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலய பங்குதந்தை அதிபர் தங்கசாமி தலைமையில், திருச்சி மறைமாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் முன்னிலையில், புனித அடைக்கல அன்னை திருஉருவ கொடி ஏலாக்குறிச்சி ஊரைசுற்றி ஊர்வளமாக வந்து கொடிமரத்தி ஏற்றப்பட்டது.

    திருவிழாவின் தொடர்ச்சியாக இன்று (23-ந்தேதி) மாலை 6 மணிக்கு மன்னார்குடி பங்குதந்தை மரிய வியான்னி தலைமையில் திருப்பலியும் நடைபெறுகிறது.நாளை (24-ந்தேதி) பாண்டிச்சேரி மேமாலூர் பங்கு தந்தை ஜோஸ்வா தலைமையில் திருப்பலியும், 25-ந்தேதி தஞ்சாவூர் மறைமாவட்டம் முதன்மை குரு பங்கு சந்தை பிரபாகர் தலைமையில் திருப்பலியும், 26-ந்தேதி புள்ளம்பாடி மறை மாவட்ட பங்கு சந்தை முதன்மை குரு சூசை மாணிக்கம் தலைமையில் திருப்பலியும், 27-ந்தேதி மலத்தான் குளம் பங்கு தந்தை தனராஜ் தலைமையிலும், ஏலாக்குறிச்சி சுள்ளங்குடி அரண்மனை குறிச்சி வடக்கு பாளையம் பக்தர்கள் சிறப்பிப்போடு அலங்காரத் தேர் பவனியும் நடைபெறுகிறது.

    28-ந்தேதி பெரம்பலூர் கெத் செமணி தியான மையம் இயக்குனர் பங்கு தந்தை யூஜின் டோனி தலைமையில் வரதராஜன் பேட்டை, ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம் பக்தர்கள் சிறப்பிப்போடு தேர்பவனியும், 30-ந்தேதி கும்பகோணம் மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் பாபநாசம் கபிஸ்தலம் பக்தர்கள் சிறப்பு முறையில் சிறப்பு வழியும் திருப்பலியும், உய்யக்கொண்டான் திருமலை பங்குதந்தை ஆம்புரோஸ் தலைமையில் புணவாசல் மாத்து பக்தர்கள் சிறப்பிப்போடு தேர்பவனியும், திருவிழாவின் நிறைவாக மே 1-ந்தேதி தேதி பங்கு தந்தை தங்கசாமி தலைமையிலும், உதவி பங்கு தந்தை ஞான அருள் தாஸ் முன்னிலையிலும் கொடி இறக்கம் நடைபெற இருக்கின்றது. நிறைவில் திருமானூர் பங்குதந்தை நன்றி கூறுகிறார்.

    Next Story
    ×