search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்
    X

    தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம்

    • ஜெயங்கொண்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • கட்டுமான தொழிலுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி அமைச்சகம் ஏற்படுத்த கோரிக்கை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பாக தனியார் கூட்டரங்கில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மார்டீன் தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் வியாபாரிகள் சங்க தலைவர் சுந்தர், அரியலூர் மாவட்டப் பொருளாளர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் அறிவழகன் வரவேற்று பேசினார்.தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் கலந்து கொண்டு சங்கத்தின் செயல்பாடுகள், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார், பின்னர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:- எந்த நாட்டில் கட்டுமான தொழில் சரியாக இருக்கிறதோ? அந்த நாட்டில் தொழில் வளம், வேலை வாய்ப்பு, பணப்புழக்கம் பெருகும். பொருளாதார வளர்ச்சி அடைய இந்த தொழிலை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது.

    கட்டுமான தொழிலுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும், ஜி.எஸ்.டி. வரி கட்டுமான தொழிலை பெருமளவில் பாதிக்கிறது, நகை உள்ளிட்ட ஆடம்பர பொருளுக்கு குறைந்த ஜி.எஸ்.டி. உள்ள நிலையில் கட்டுமான பொருட்களுக்கு 28 சதவீதம் வரை ஜி.எஸ்.டி. உள்ளது. நாட்டில் பெருவாரியான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய தொழிலாக கட்டுமான தொழில் உள்ளது.எனவே ஜி.எஸ்.டி. வரியை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது ஐந்து சதவீதத்திற்கு வரியை குறைக்க வேண்டும். காலவதியான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும், தமிழக அரசிடம் கட்டுமான தொழில் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியுள்ளோம் என்று பேசினார். கூட்டத்தில் பொருளாளர் ஜெகதீசன், திருச்சி மண்டல செயலாளர் புருஷோத்தமன், பெரம்பலூர் மண்டல தலைவர் ராஜாராம், இணை செயலாளர்கள் ஜெயமுருகன், தென்னரசு, சிவகுமார், திருச்சி மண்டல தலைவர் சிவக்குமார், பெரம்பலூர் மாவட்ட தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதில் அரியலூர் மாவட்ட தலைவராக மார்டீனும், மாவட்ட செயலாளராக அறிவழகனும், மாவட்ட பொருளாளராக சுந்தரியையும் மற்றும் புதிய நிர்வாகிகள் பலரும் தேர்வு செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மார்டீனுக்கு பொறியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×