வாடிக்கையாளரிடமிருந்து சட்ட விரோதமாக பெற்ற ரூ.1.35 லட்சத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் - வங்கிக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு

கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீத முள்ள தவணைகளை காப் பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.
வாடிக்கையாளரிடமிருந்து சட்ட விரோதமாக பெற்ற ரூ.1.35 லட்சத்தை வட்டியுடன் வழங்க வேண்டும் - வங்கிக்கு நுகர்வோர் ஆணையம் உத்தரவு
Published on

அரியலூர், அக்.27-

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம் பாடி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். மனைவி லலிதா (46).

கடந்த 2020-ம் ஆண்டு இவர், அரியலூர் ஒரு வங்கியில் ரூ.4.66 லட்சம் வீட்டுக் கடன் பெற்றிருந்தார். அதற்கு அடமானமாக தன்னுடைய வீட்டுப் பத்திரத்தை கொடுத்துள் ளார்.

வங்கியின் சார்பில் அந்த வீட்டுக் கடன் தொகையி லிருந்து லலிதாவுக்கு ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.11,398 செலுத்தி காப்பீடு செய்து கொடுத்திருந்தனர்.

கடன் தவணையை முறை யாக செலுத்தி வந்த லலிதா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ந் தேதி உயிரிழந்தார்.

கடன் ஒப்பந்த விதிகள் மற்றும் காப்பீட்டு விதிக ளின்படி கடன் பெற்றவர் உயிரிழந்து விட்டால் மீத முள்ள தவணைகளை காப் பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டும்.

ஆனால் அந்த இன்சூ ரன்ஸ் நிறுவனம் காப்பீடுத் தொகையைச் செலுத்த வில்லை.

ஆனால் வாங்கி தரப்பில் கொளஞ்சிநாதன் மற்றும் அவரது மகன்களை மீதி தவணைகளைக் கட்டுமாறு கேட்டு தொடர்ந்து கட்டாயப் படுத்தியதால் அவர்கள் கடந்த மார்ச் மாதம் வரை 11 மாதத் தவணை தொகையை செலுத்தி விட்டனர்.

இதுகுறித்து லலிதாவின் கணவர் கொளஞ்சிநாதனும், அவரது மகன்களும் அரிய லூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்து வந்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தமிழ் செல்வி, உறுப்பினர்கள் பாலு மற்றும் லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

இதில் வங்கியும், காப்பீட்டு நிறுவனமும் சேர்ந்து லலிதா பெயரில் செய்திருந்த அடமான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அவரது வீட்டுப் பத்திரங்களை 30 நாட்களுக்குள் திருப்பி கொடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக பெற்ற 11 மாத தவணை தொகை ரூ.1.35 லட்சத்தை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.50 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com