என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு கிராமசபை கூட்டம்
- அரியலூர் பகுதியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது
- மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொ ண்டம், தா.பழுர், ஆண்டி மடம் ஆகிய ஊராட்சி ஒன்றி யங்களில் உள்ள 201 கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.வாரணவாசி ஊராட்சி யில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
இலந்தைகூடம் ஊரா ட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் எம்.எல்.ஏ. சின்னப்பா கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.அரியலூர் ஒன்றியம் தாமரைக்குளம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.
எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் கிராமச பைக்கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் சிவா(எ)பரமசிவம் தலைமையிலும் ஒட்டக்கோ வில் ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக்கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் செங்கமலை தலைமை யிலும், வாலாஜா நகரம் ஊராட்சி யில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் அபிநயா இளையராஜா தலைமையிலும் நடைபெற்றது.ஆங்காங்கே நடைபெற்ற கிராமசபைக்கூட்டங்களில் அரசுத்துறை அதிகாரிகள் ஊராட்சிமன்ற துணை தலைவர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம சுயஉதவிக்குழுக்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டனர்






