என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு
- அரியலூரில் தேசிய அளவிலான கைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெற்றது
- 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர்
அரியலூர்,
இந்திய பள்ளி விளையாட்டு குழுமத்தால் நவம்பர் மாதம் டெல்லியில் நடத்தப்படவுள்ள 14 வயது பிரிவு மாணவர்களுக்கான தேசிய கைப்பந்து போட்டிக்கு தமிழக அணிக்கானத் தேர்வு அரியலூரில் நடைபெற்றது.அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வீரர் தேர்வு க்கான போட்டியில் 38 மாவட்ட ங்களில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 16 மாணவர்கள் தேர்ந்தெடுக்கபட்டு தமிழக அணிக்காக விளையா டவுள்ளனர்.முன்னதாக போட்டியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லெனின் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி ஆய்வாளர் தலைமையில் அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் பொன்பரப்பி திருமூர்த்தி, விளாங்குடி வீரபாண்டி யன்,கல்லாத்தூர் விஜய்ஆனந்த், ஆண்டிமடம் நிர்மலா மேரி ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களை தேர்வு செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலை ப்பள்ளி உடற்கல்வி இயக்குநர் த. ரவி, உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ், கீழப்பழூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி, அரியலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் ,சேகர் ,இளங்கோவன், குமார், ராஜசேகர், தினேஷ்குமார், இளவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்