search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல்வைப்பு
    X

    அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல்வைப்பு

    • அரியலூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட பட்டாசு குடோனுக்கு சீல்வைக்கப்பட்டது
    • பட்டாசு குடோன் உரிமையாளர் கைது செ்யயப்பட்டு உள்ளார்

    அரியலூர்,

    திருமானூரில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரூ.7 லட்சத்து 55 ஆயி–ரம் மதிப்பிலான 88 மூட்டை நாட்டு வெடிகள், 63 அட்டைபெட்டிகளில் சிவ–காசி பட்டாசுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து குகன் பட்டாசு கடை உரிமையாளர் ராஜேஷ்குமார்(37) மற்றும் கடையின் மேலாளர் சத்தியமூர்த்தி(31) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து சத்தியமூர்த்தியை கைது செய்து, நீதிமன்றத்–தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான ராஜேஷ்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் க.பழூர் பகுதியில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த பட்டாசு குடோனை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த குடோன் அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த குடோனுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல்வைத்தனர். குடோன் உரிமையாளர் தஞ்சையை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×