என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்பு
- கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டது.
- கோர்ட்டு உத்தரவுபடி
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து ஆண்டிமடம் விளந்தை பகுதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி ஆண்டிமடம் விளந்தை மேலஅகத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனடிப்படையில் நேற்று கோயில் சொத்துக்களை கையகப்படுத்த இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் நாகராஜன் தலைமையிலான குழுவினர் ஆண்டிமடம் விலந்தை பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போதுஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்ட 26 பேரில் 24 பேர் நீதிமன்ற மூலம் பெற்ற தடை உத்தரவை காண்பித்துள்ளனர்.
தடை உத்தரவு வாங்காத இரண்டு நபர்களான ராதாகிருஷ்ணனின் அன்னதான கூடமும், செல்வகுமாரின் வால்பட்டரை இடம் மீட்கப்பட்டது. இதில் செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் வருவாய் துறையினர், காவல்துறையினர் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர், செயல் அலுவலர்கள், திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் வால்பட்டறை மற்றும் அன்னதான கூடம் ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






