என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடாரங்கொண்டான் அரசு பள்ளியில் வானவில் மன்றம்
- கடாரங்கொண்டான் அரசு பள்ளியில் வானவில் மன்றம் நடைபெற்றது
- ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி கலந்து கொண்டு அறிவியல் நுட்பங்களை விளக்கி பேசினார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அறிவியல் நுட்பங்களை விளக்கி பேசினார். புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் உற்று நோக்கங்களின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களிடையே எடுத்துரைத்தார். கல்வித் துறை சார்பில் அறிவியல் தூதுவராக கலந்து கொண்ட சதீஷ்குமார், அறிவியல் தாக்கத்தை ஏற்படுத்திய பெர்னௌலி தத்துவம், ஸ்பிரேயர் செயல்படும் விதம், நீர் சூழல் மற்றும் அதன் தாக்கம், வாயுக்களில் அழுத்தம் வேறுபாடு, பருமப்பொருள்களில் அழுத்தம் போன்ற செயல்பாடுகளை செய்து காட்டி மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் புஷ்பவல்லி, சவேரியம்மாள், இளமுருகு ஆகியோர் செய்திருந்தனர்.






