search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை-துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
    X

    அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை-துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

    • அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தபட்டது
    • விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 1895 மெ.டன் யூரியா, 1231 மெ.டன் டி.ஏ.பி 444 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 2118 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது.

    இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 260 மெ.டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 692 மெ.டன் என கூடுதலாக 952 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 23.5 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளது. நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைகள் மூலம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகளை அமைக்க விவசாயிகளுக்கு அரசு மானியமாக நமது மாவட்டத்திற்கு ரூ.7.92 கோடி நிதி இலக்கு ஒதுக்கீடு செய்து பெறப்பட்டுள்ளது.

    சமீபத்தில் இலவச விவசாய மின் இணைப்பு பெற்றுள்ள 1894 விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் (அ) தெளிப்பு நீர் பாசனம் வழங்கும் திட்டத்தில் இணைத்துக்கொண்டு பயன்பெற்றிட தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் 13-வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் விபரங்களை செல்போன் எண் மற்றும் வங்கிக்கணக்கு எண்ணுடன் இணைப்பது அவசியம் ஆகும்.

    மேலும், வேளாண் அறிவியல் நிலையம் சோழமாதேவி மூலம் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் கடைபிடிக்க வேண்டிய வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் விளக்கி கூறப்பட்டது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் விவசா யிகளால் எழுப்பப்பட்டது.

    இதில் துறைவாரியாக சம்பந்தப்பட்ட அலுவ லர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர். மேலும் விவசாயிகள் அளித்த மனுவிற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி வழங்கினார். இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள், விவசா யிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×