என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டம்
- அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது
- மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 397 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 397 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.கூட்டத்துக்கு கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து, பொது மக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தர விட்டார். இக்கூட்ட த்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை மற்றும் அனைத்து த்துறை அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






