என் மலர்
உள்ளூர் செய்திகள்

மக்கள் குறை தீர் கூட்டம்
- அரியலூர் மக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
- 381 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 381 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story






