என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
    • கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 307 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் பெற்றுக் கொண்டார். பின்னர் இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர்ரவிச்சந்திரன், தனித்துணை ஆட்சியர் குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.



    Next Story
    ×